Saturday, January 9, 2021

நினைவு தூணை இடித்த சிங்கள அரசை கண்டிக்கிறேன்!

எங்கள் உறவுகளை தமிழர்களை தமீழிழத்தில் முள்ளிவாய்க்காலில் முற்றாக அழித்து கொன்றுவிட்டு அவர்கள் நினைவால் யாழ் பல்கலையில் எழுப்பிய நினைவுதூண்களை கூட நேற்று இரவு 08-01-2021 யாரும் இல்லாத நேரத்தில் அழித்து அப்படி ஒரு இனக்கொலை நடக்கவில்லை என்பது போல மறைக்க பார்க்கிறது சிங்கள பேரினவாதம்.

உலகம் இன்னும் கண்டிக்காமல் வேடிக்கை பார்க்கிறது. தமிழர்கள் ஆயுத போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறார்களே தவிர, இன்னும் கையில் எடுக்கமாட்டார்கள் என்று நினைத்து விட வேண்டாம்.

இப்போதைய தேவையில் அறவழியிலேயே எங்கள் நாட்டை தமிழீழத்தை அடைய விரும்புகிறோம். எங்களை ஒடுக்க ஒடுக்க எங்கள் உணர்வுகளை சிதைக்க சிதைக்க வீறு கொண்டு எழும் நாள் தள்ளி போகாது என்பதை நினைவூட்டுகிறோம்... அப்படி வரும் நாள் உலகமே எதிர்த்தாலும் சிங்கள தரைமட்டமாகும் என்பதையும் எச்சரிக்கிறோம்..

தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம்.
எங்கள் லட்சிய கனவு, தமிழீழம் அமையும் வரை என்றும் ஓயாது...

தமிழீழ தாகத்துடன்,
மைக்கேல் செல்வ குமார்

No comments:

Post a Comment