Monday, January 18, 2021

கொன்றவனை அரவணப்பதா?

தமிழீழத்தில் 146000 தமிழர்களை கொன்றவனுடன் கூட இருந்த முரளீதரன் படத்தில் நடிக்க ஒப்புகொண்டதற்கே தமிழன் மனதிலிருந்து ஒரு நடிகனாக தூக்கியெறிந்த பிறகும், திருந்தவில்லை....

இப்போது வேறு வடிவில் மேலும் சிங்களவனுக்கு சொம்படிக்க,

எல்லோரையும் அரவணைக்க வேண்டும் என்ற தொனியில் "யாதும் ஊரே, யாவரும் கேளிர்" என்று மேலும் மேலும் சிங்களவனை தூக்கிபிடிப்பது தமிழின துரோகத்தையே காட்டுகிறது.

கொன்றவனையும் அரவணைப்பதா? இனத்தையே அழித்தவனை இறுகப்பிடிப்பதா?
திட்டமிட்டு அழித்தவனை தாங்கி பிடிப்பதா?

சகோதரர் Vijay Sethupathi உங்களுக்கு ஏற்கனவே எச்சரிக்கை விட்டு தாமதித்து துரோகி முரளிதரன் படத்திலிருந்து விலகினீர்கள்.

இப்போது மீண்டும் சிங்களவனுக்கே சிங்கி அடிக்கும்விதமாக அடுத்த படத்திற்கான போஸ்டர் வலம் வருகிறது. இதற்கு முற்றுபுள்ளி வைக்க வலியுறுத்துகிறேன்.

ஏற்கனவே தமிழர்களின் சினத்திற்கு சிக்கியிருக்கிறீர்கள். உங்கள் மேலுள்ள எங்கள் என்ணங்கள் கலைந்து நிற்கிறது.

மேலும் மேலும் அதற்கு வலுசேர்க்கும் விதமாக தமிழர்களை அழிக்கும் பாதகர்களுக்கு ஆதரவாக ஆடவிரும்புகிறீர்கள். தமிழர்கள் நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

தமிழர்களுக்கு துரோகம் செய்தவர்களுடன் இணையவேண்டுமென்றால் சிங்கள தேசத்துக்கு குடியேறுங்கள்.

தமிழன் என்ற வேசமிட்டு தமிழர்களுக்கு துரோகமிழைக்க வேண்டாம்.

எப்போதுமே சொல்லிக்கொண்டிருக்கமாட்டோம். கடைசியாக எச்சரிக்கிறோம் படத்திலிருந்து விலகுங்கள். அடுத்த தடவை இதுபோன்ற செயல்களுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்.


தமிழீழம் எங்கள் உயிர் மூச்சில் கலந்திருக்கிறது.

சிங்கள அரச காடையர்களை என்றும் எதிர்க்கும் தமிழன்,

மைக்கேல் செல்வ குமார்,

No comments:

Post a Comment