Thursday, January 28, 2021

பாசிச பாசகவின் பிடியில் சிக்கியிருக்கிறதா முகநூல் நிர்வாகம்?

என்னுடைய முகநூல் கணக்கு அபாயத்தில் உள்ளதாக முகநூல் அறிவித்தது இப்போது.

என்னுடைய பின்னூட்டங்களும், பதிவுகளும் மக்களை தவறாக வழிநடத்துவதாக கூறுகிறது...
எத்தனை தடவை முடக்கி மீண்டு வருகிறது. இப்போது மொத்தமாக முடக்க நடவடிக்கை என கூறுகிறது.
விடுதலை புலிகளை உலகறிய பேசினால் சிங்கள கைகூலியின் அடியாளாக மாறி முகநூல் நிர்வாகம் எங்களை முடக்குகிறது.
பாசிச பாசகவின் மக்கள் விரோதங்களை மக்களுக்கு கூறினால், பாசகவின் கைகூலியாக செயல்பட்டு எச்சரிக்கை செய்வது..
இது என்ன மாதிரியான முகநூல் நிர்வாகத்தின் மனநிலை என தெரியவில்லை.
முகநூல் இந்திய அதிகாரியாக இருந்த பாசிச பாசகவின் உளவாளி மாற்றப்பட்டதையடுத்து, வேறு ஒருவர் நியமிக்கப்பட்டார். அப்போதாவது முகநூல் உணர்வு சார்ந்த நேர்மையான பதிவுகளுக்கு மதிப்பளிக்கும் என்று நம்பினோம். அதுவும் இப்போது கானல் நீராக உள்ளது.
யாரையும் விலைக்கு வாங்கும் சக்தி பாசிச பாசகவுக்கு இப்போது உள்ளதால் இப்படிபட்ட நிலை இருக்கிறது.
காலம் மாறும், காட்சிகளும் மாறும் என பாசிச பாசக உணர வேண்டும்.
நல்ல அரசு அமைந்தால் முகநூலுக்கே தடை விதிக்க கூடிய நிலை கூட வரலாம் என்பதை அடக்கத்துடன் முன் அறிவிப்பாக முகநூல் நிர்வாகத்துக்கு தெரிவிக்க விளைகிறேன். ஆகவே பாசிச பாசகவின் மகுடிக்கு ஆடுவதை உணர்ந்து செயல்படவும் வேண்டுகிறேன்.
முகநூல் நிர்வாகம் தமிழ் பதிவுகளை கற்றறிந்த தமிழர்கள் மூலம் நிர்வகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படியிருந்தால்தான் நல்ல தரமான சமூக ஊடமாக விளங்க வழிவகுக்கும்.
பாசிச அரசுகளின் கைக்கூலியாக முகநூல் செயல்படகூடாது.
தமிழர்களின் உணர்வுகளை அடக்க முயலும் முகநூல் நிர்வாகத்தை கண்டிக்கிறேன்...


மைக்கேல் செல்வ குமார்

No comments:

Post a Comment