Sunday, November 22, 2015

சிங்கப்பூரின் சீவக சிந்தாமணி, துவார் சுப்பையா அவர்களுக்கு பிறந்த தின வாழ்த்து!

திராவிட இயக்க கொள்கைகளை அடி மாறாமல் எடுத்துரைக்கும் வரலாற்று பெட்டகம் அண்ணன் துவார் சுப்பையா அவர்கள், இன்று தனது பிறந்த நாளிலும், கழகத்தின் மீதும், உலக தமிழர்கள் மீதும் பற்றுள்ளவர்.
 
எங்கெல்லாம் தமிழர்கள் தாக்கபடுகிறார்களோ, தமிழர்கள் கொடுமைப்படுத்தப்படுகின்றனரோ அவற்றிற்கெல்லாம் கண்டனம் தெரிவிப்பவர்.
 
அவ்வாறு தமிழ், தமிழர்கள், தமிழினத்தின் மீது காதல் கொண்ட சகோதரர் துவார் பொன் சுப்பையா அவர்கள் கடந்த 3 நாட்களாக தமிழீழ தமிழர்களுக்கான மனித உரிமை மீறல்களுக்கான தலைவர் வைகோ அவர்கள் பங்குபெறும் நிகழ்ச்சிகளில் பங்குபெற்று வருகிறார்கள். தாய் தமிழக தலைவர்களுடனும், தமிழீழ தலைவர்களுடனும் பங்குபெற்று வருவது சிறப்பாகும்.
 
அவருடைய தமிழ் உணர்வும், கழகத்தின் பால் காதலும் போற்றுதலுக்குரியது. அண்ணனின் கடமைகள் கச்சிதமாக நிறைவேற புதிய பிறந்த நாளை தமிழால் மக்களுக்கான தொண்டாற்ற செயல்படுத்துவதற்காக பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
 
ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment