Saturday, January 10, 2015

ஈழத்தமிழர் படுகொலை உக்கிரமாக தொடருமோ?

இலங்கை அதிபர் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவுடன், மைத்திரி பால சிறிசேனா தேர்தல் களத்தில் நின்றார். தமிழர்களும் பெரிய தீமையான ராஜபக்சா க்கு வாக்குகளை செலுத்தாமல், சிறிய தீமையான மைத்திரி பால சிறிசேனா க்கு வாக்களித்து அதிபராக தேர்ந்தெடுத்துள்ளார்கள். இப்போதைய அதிபரே தமிழீழ இனப்படுகொலை 2009 இல் முள்ளிவாய்க்காலில் நடந்த போது இராணுவ அமைச்சராக இருந்து ராஜபக்ஷ வின் கட்டளையால் இராணுவத்துக்கு அதிகாரத்தை கொடுத்து இன அழிப்பை செய்தார். அப்போது இராணுவ தளபதியாக பொன்சேகா இருந்தார். இப்போது அந்த தளபதியையே இராணுவ செயலாளராக நியமித்துள்ளார் இப்போதைய அதிபரும், இராணுவ அமைச்சக மந்திரியுமான மைத்திரி.

எனவே இப்போதே அவர்கள் திட்டமிட்டு தமிழருக்கெதிராக மீண்டும் இனப்படுகொலைகளை அரங்கேற்ற தொடங்கியுள்ளார்களோ என்ற அச்சம் தமிழர்களிடயே எழுந்துள்ளது. எனவே மீண்டும் மைத்திரியும், பொன்சேகாவும் இணைந்துள்ள நிலையில் அந்த காட்டுமிராண்டி செயலை செய்ய துணியாமல் தமிழர்களுக்கு சுய உரிமையை வழங்க வேண்டும்.

தமிழர்களின் வாக்குகளால் மட்டுமே வெற்றி பெற்ற மைத்திரி இனிமேலாவது காலம் தாழ்த்தாமல் தமிழர்களின் காணிகளை திரும்ப ஒப்படைத்து, இராணுவத்தை வடக்கு கிழக்கிலிருந்து வெளியேற்றி தமிழர்கள் சுதந்திரமாக வாழ வழி வகை செய்து தமிழர்களுக்கு கைமாறு செய்யவேண்டும்.

மறுமலர்ச்சி மைக்கேல்...

No comments:

Post a Comment