Saturday, January 17, 2015

ஜல்லிக்கட்டு மேலை கலாச்சாரமா? திருமதி.மேனகா காந்தி-க்கு கண்டனம்...

பல நூற்றாண்டுகளாக ஜல்லிகட்டை வீர விளையாட்டாக தமிழர்கள் அனைவரும் கொண்டாடி மகிழ்கிறோம். இது தமிழ் கலாச்சாரத்தின் அடையாளமாகும். இதை கொச்சை படுத்துவது போல ஜல்லிகட்டு மேலை நாட்டு விளையட்டு என்றும், உச்சநீதிமன்றம் தடை விதித்தது சரி என்றும் கூறியுள்ளார் திருமதி மேனகா காந்தி. தமிழர்கள் தடையை நீக்க போராடுகின்ற நிலையில் மத்திய அமைச்சரே, இப்படி பேசியிருப்பது தமிழரின் நெஞ்சில் ஈட்டியை பாய்த்தது போல உள்ளது. அவர் இப்படி பேசியதற்கு நான் வன்மையான கண்டனத்தை தெரிவித்துகொள்கிறேன். அதோடு மட்டுமல்லாமல் பேசியதை திரும்ப பெறவேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன். 

பாஜக வின் அமைச்சர் இப்படி பேசியதற்கு தமிழக பாஜக தலைவர் அது அவரின் தனிப்பட்ட கருத்து என்று கூறியுள்ளார். யார் பேசினாலும் தனிப்பட்ட கருத்து என்று கூறும் திருமதி தமிழிசை, பிரதமர் கூறுவதும் தனிப்பட்ட கருத்து என்று கூறுவாரா? எனவே, இது போன்ற நாடக வேலைகளில் தமிழக பாஜக மீண்டும் ஈடுபடவேண்டாம் எனவும் கேட்டுகொள்கிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்...

No comments:

Post a Comment