Monday, January 12, 2015

விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை- க்கு இடையே பாலம், மத்திய அமைச்சருக்கு நன்றி

திருவள்ளுவர் திருப்பயண தொடக்க விழாவில் பேசிய மத்திய அமைச்சர் திரு பொன். ராதாகிருஸ்ணன் அவர்கள் தமிழக அரசு அனுமதி வழங்கினால், குமரிக்கண்டத்தில் உள்ள கன்னியாகுமரியில் அமைந்திருக்கும் திருவள்ளுவர் சிலை-க்கும், அதன் அருகில் அமைந்திருக்கும் விவேகானந்தர் மண்டபத்திற்கும் இடையே பாலம் அமைத்து கொடுப்பதாக கூறியுள்ளார். மேலும் இதற்கான நிதியும் தயாராக உள்ளதாகவும் அனைத்து செலவையும் மத்திய அரசே ஏற்றுகொள்ளும் என அறிவித்துள்ளது பொதுமக்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அலைகளின் சீற்றத்தால் சில சமயங்களில் ஐய்யன் வள்ளுவர் சிலையை காண முடியாமல் தவிக்கும் சுற்றுலா பயணிகளுக்கு இது ஒரு நல்ல செய்தியாக அமைந்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மிகுந்த ஆர்வமுடன் இவற்றை கண்டுகளிப்பதோடு அரசுக்கும் இதனால் வருமானம் கிடைக்கும் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். இந்த நல்ல திட்டத்திற்கு தமிழக அரசு முட்டுகட்டை போடாமல் உடனே அனுமதி வழங்க வேண்டும். அனுமதி கிடைத்தவுடனே குமரியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மத்திய அமைச்சர் திரு பொன். ராதாகிருஸ்ணன் அவர்கள் காலம் தாழ்த்தாது பாலம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டு கொள்வதோடு இந்த உன்னதமான திட்டத்தை அறிவித்ததற்காக பொதுமக்களின் சார்பாக நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்...

No comments:

Post a Comment