Saturday, January 31, 2015

பாரத தேசியக் கொடி ஏற்றும்போது அதில் பூக்கள் வைப்பது ஏன்?

பாரத திருநாட்டின் தேசிய கொடி ஏற்றும்போது, தேசிய கொடி மேலே ஏறி பட்டொளி வீசி பறப்பதற்கு முன் அதில் வைக்க பட்டுள்ள மலர்கள் கீழே வந்து விழுவதை பார்த்து கை தட்டுகிறோம். 

ஆனால் அதற்குள் ஒளிந்துள்ள உண்மை பாரத மக்களாகிய நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?

நம் பாரத தேசம் சுதந்திரம் பெறுவதற்கும் பெற்ற சுதந்திரத்தை பேணிகாக்கவும் நடந்த போர்களில் எண்ணற்ற வீரர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். வீரர்கள் வீரச்சாவை அரவணைக்கும்போது, அவர்களின் மனைவியின் கூந்தலில் இருக்கும் மலர்கள் கீழே உதிர்கின்றன. நம் பாரதத்தின் தேசிய கொடி மேலே ஏறும் போது அதிலிருந்து மலர்கள் கீழே விழுந்து அதனையே ஞாபகப்படுத்துகின்றது. 

நம் தேசிய கொடி பட்டொளி வீசி பறக்கவும் நாட்டு மக்களின் சுக போக வாழ்விற்காகவும் எங்கோ ஒரு மூலையில் தினமும் எல்லையில் நம் வீரர்கள் தங்களின் இன்னுயிரை இழந்து கொண்டு இருக்கிறார்கள்.அவர்களின் மனைவிகளின் கூந்தலில் இருந்து பூக்கள் உதிர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

இனி ஒவ்வொரு முறையும் கொடியேற்றத்தைக் காணும்போதும் இதை மனதில் வைத்து தேசத்திற்காக இன்னுயிர் கொடுக்கும் தியாக தீபங்களை நினைவு கூருவோம்.

மறுமலர்ச்சி மைக்கேல்...

No comments:

Post a Comment