Saturday, November 26, 2016

சட்ட நாள் நல்வாழ்த்துக்கள்!

இந்தியா சுதந்திரம் பெற்ற பின், 1949 நவம்பர் 26 ல், இந்திய அரசியலமைப்பு சட்டம் தேசிய அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டு சட்ட நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. நானும் இந்த சட்டங்களை விரும்பி படிப்பவன் என்ற முறையில் சட்டத்தை விரும்பி படிக்கும் அனைவருக்கும் இந்த சட்ட நாள் வாழ்த்துதலை தெரிவித்துக்கொள்கிறேன்.

வழக்கறிஞர்களாக இருப்பவர்கள், இந்த சட்டம் மூலம் அனைவருக்கும் சமமான நீதி கிடைத்திட போராட வேண்டும். ஏழைகளுக்கும் நீதி கிடைத்திட வழி செய்ய வேண்டும். இந்த சேவை மூலம் நீதி காக்கப்பட்டு மனித நேயம் உயரும். கல்லூரிகளில் சட்டம் பயிலும் அனைத்து மாணவர்களும் தலை சிறந்த வழக்கறிஞர்களாக உருவாகவேண்டும் என வாழ்த்துதலை தெரிவித்து, அனைவருக்கும் சட்ட நாள் நல் வாழ்த்துக்கள்.

மைக்கேல் செல்வ குமார்

No comments:

Post a Comment