Saturday, November 26, 2016

தமிழினத்தை உலகறிய செய்த மாவீரனுக்கு பிறந்த நாள் வாழ்த்து!

அடிமைபட்டு ஒடுக்கப்பட்டிருந்த தமிழினத்தை வீறுகொண்டு எழ செய்து, தமிழீழத்திலே தனது விடுதலைக்காக 30 வருடங்களுக்கு மேலாக ஆயுத போராட்டததை முன்னெடுத்து தமிழின தமிழீழ விடுதலைக்கு போராடிய தலைவன்தான் தமிழீழ தேசிய தலைவராக உருவெடுத்த மேதகு வே பிரபாகரன் அவர்கள்.

இலங்கை சிங்களவர்கள், தமிழீழ பகுதியை ஆக்கிரமிக்க துடிக்கும்போதெல்லாம் பின்னங்கால் பிடரியில் அடித்து விரட்டியவர். உலகில் எந்த ஒரு விடுதலை இயக்கமும் கண்டிராத, ராணுவ தரை படை, கடற்படை, விமான படைகளையும் தாண்டி 4 ஆவதாக கரும்புலிகள் படையையும் உருவாக்கிய தன்னலமில்லா தலைவன். 

ஒழுக்கமும் சுய மரியாதையும் தனது இயக்கத்தில் அனைவருக்கும் கற்றுக்கொடுத்த மாவீரன். அப்படி பட்ட மாவீரனால்தான் தமிழினம் உலகறிய செய்யப்பட்டது. 

அந்த மாவீரன் பிரபாகரன் அவர்கள் தான் தமிழினத்திற்கே தலைவராக இருக்கிறார். அவர் பிறந்த நாளில் நாம் அவர் கண்ட கனவான தமிழீழம் மலரவும், அதற்காகன் பொதுவாக்கெடுப்பை ஐநா நடைமுறைப்படுத்த, செய்ய வேண்டிய வேலைகளுக்கு போராடி அழுத்தம் தரவும் நாம் வீதிக்கு வர வேண்டும்.

இளைஞர்களாகிய நாம் தமிழினம் காக்க தமிழீழத்திற்கு போராடாவிட்டால் வேறு யார் போராடுவார் என்ற தமிழ் உணர்வோடு நம் தமிழீழம் மலர உறுதியேற்ப்போம்.

தமிழன்புடன்.
மறுமலர்ச்சி மைக்கேல்

No comments:

Post a Comment