Wednesday, December 10, 2014

தமிழ் பத்திரிகையாளரை தாக்கிய ஆந்திர போலீசாரின் அராஜகம்.


ஆயிரத்துக்கு மேலான இந்து கோவில்களை இடித்து, லட்சகணக்கான தமிழர்களை ஈழத்தில் கொன்று குவித்த கொடியவன் ராஜபக்சே பாரத திருநாட்டில் இந்து கோவிலான திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வந்திருக்கிறான். இதை எதிர்த்து தமிழர் அமைப்புகள் போராட்டம் நடத்தியுள்ளன. இந்த தகவல்களை சேகரிக்க சென்ற தமிழ் பத்திரிகையாளர்களை ஆந்திர போலீசார் கடுமையாக தாக்கியுள்ளனர். இது ஜனனாயக விரோதபோக்கான செயலாகும். இது வன்மையாக கண்டிக்கதக்கது. தாக்கியவர்களை அம்மாநில அரசு உடனடியாக விசாரித்து பணி இடை நீக்கம் செய்ய வேண்டும். இதையே தொடர்ந்தும் ஆந்திர போலீசார் கடைபிடித்தால் அது சம்பந்தபட்ட அரசுக்கும் நல்லதல்ல என தெரிவித்து கொள்கிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்

No comments:

Post a Comment