Thursday, December 11, 2014

பாரதியின் பிறந்த நாளை தேசிய தினமாக கொண்டாட்டம்


சுப்பிரமணி என்னும் இயற்பெயரை கொண்ட பாரதி சிறு வயது முதலே தமிழின் மீதான பற்றால் தனது 7 வயதிலே கவிதை எழுத தொடங்கினார். சிறு வயதிலே தந்தையை இழந்த இவருக்கு தனது கவித்திறமையை பாராட்டி "பாரதி" பட்டத்தை கொடுத்த எட்டயபுர மன்னரின் அரசவையிலே கவிஞராக பணியாற்றினார். கண்ணன்பாட்டு, குயில்பாட்டு, பாஞ்சாலி சபதம் என்னும் தமிழ் காவியங்களை நமக்கு தந்தருளினார். 

தமிழ் கவிதைகளை பாடல்களாக தந்ததன் மூலம் அகிலமும் போற்றும் விதத்தில் தமிழை கொண்டு சேர்த்து அகிலமும் அறிய "மகாகவி" என மக்களால் அன்போடு அழைக்கப்பெற்றார். அவரது கவிதைகளை பல இழைஞர்கள் படித்து கவிஞர்களாக உருவெடுத்து தமிழுக்கு பெருமை சேர்க்கின்றனர்.  

எனவே தமிழுக்கும் அதன் கவிதைகளுக்கும் பெருமை சேர்த்த இவரின் பிறந்த தினத்தை தேசிய தினமாக தாய் தமிழகம், மற்றும் பாரத திரு நாட்டிலுள்ள அனைத்து பள்ளிகளிலும், வெளி இடங்களிலும் கொண்டாடி தமிழுக்கும் தமிழ் கவிதைகளுக்கும் பெருமை சேர்ப்போம். 

மறுமலர்ச்சி மைக்கேல்...

No comments:

Post a Comment