Friday, December 12, 2014

மின் கட்டண உயர்வு - தமிழக அரசின் விரோத செயல்


தமிழ்நாட்டில் மின்சார கட்டணம் 15% உயர்த்தப்பட்டுள்ளதாக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. இதன் மூலம் தமிழக அரசானது ஏழை எளிய மக்களுக்கு துரோக செயல் புரிகிறது. சிறு வருவாய் மூலம் அன்றாடம் வாழ்க்கையை கழிப்பதற்கே சிரமப்பட்டு கொண்டிருக்கும் தமிழக மக்கள் இவ்வளவு நாட்களும் சிறு வெளிச்சத்தில் வாழ்க்கையை நடத்தி வந்தனர். இப்போது இந்த மின்சார கட்டணத்தை 15 % உயர்த்தியதன் மூலம் மின் கட்டணத்தை கட்ட முடியாத நிலை ஏற்படுவதோடு மக்கள் இருளில் வாழ வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. 

எனவே தமிழக அரசானது, ஏழை எளிய மக்களின் குடும்ப சூழலை உணர்ந்து, உடனே மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும். இதனால் மீண்டும் மக்கள் வெளிச்சத்தில் வாழ வழி வகை செய்ய வேண்டுமென கேட்டுகொள்கிறேன். 

மறுமலர்ச்சி மைக்கேல்...

No comments:

Post a Comment