Friday, December 19, 2014

பிஞ்சு குழந்தைகளை கொன்ற தலிபான்களை அழிக்கவேண்டும்

பாகிஸ்தானிலுள்ள பெஷாவர் ராணுவப் பள்ளிக்குள் புகுந்த 9 தலிபான் தீவிரவாதிகள் கொஞ்சமும் ஈவு இரக்கமில்லாமல், குழந்தைகளை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். குறிப்பாக, குழந்தைகளின் தலையை குறிவைத்து மிக அருகில் நின்று, மிருகத்தனத்தைவிட கொடிய செயலாக சுட்டுக் கொன்றுள்ளனர். தாக்குதல் சம்பவத்தில், 132 குழந்தைகள் உட்பட 141 பேர் உயிரிழந்தனர். இது இதயமே இல்லாதவர்களின் வெறிசெயல். வன்மையாக கண்டிப்பதோடு பாகிஸ்தான் இராணுவமானது உடனே தலிபான் மீது போர் தொடுத்து உலக நாடுகளின் உதவியோடு முற்றிலும் வேரோடு அழித்து ஒழிக்க வேண்டுமென அழுத்தமாக வலியுறுத்துகிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்...


No comments:

Post a Comment