Wednesday, December 31, 2014

சல்மான்கானின் துரோக செயலுக்கு கண்டனம்.


600 க்கு மேலான தமிழக மீனவர்களை கொன்றழித்த இலங்கையின் அதிபரான மகிந்த ராஜபக்ச க்கு ஆதரவாக 2015 ஜனாதிபதிக்கான தேர்தல் பரப்புரையில் கலந்து கொண்டு வாக்கு சேகரித்துள்ளார் இந்தி பட நடிகரான சல்மான்கான். இதன் மூலமாக அவர் இந்திய தேசத்திற்கும், தமிழ் திருநாட்டிற்கும் துரோகம் இழைத்திருப்பதோடு மட்டுமல்லாமல் பாரத தேசம் கொடியவனுக்கு இன்னும் சாதகமாக இருக்கும் என்பதையே மறைகுகமாக எடுத்துகாட்டுவதாக விழங்குகின்றது. இது போன்ற செயல்களுக்கு பாரத பிரதமர் அவர்கள் அதிகாரிகள் மூலமாக நடவடிக்கை எடுத்து சல்மான்கானை தேச துரோக வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்கும்படி வலியுறுத்துவதோடு, சல்மான்கான் மீண்டும் இது போன்ற செயல்களில் ஈடுபடகூடாது எனவும் வன்மையாக எனது கண்டனத்தை பதிவு செய்கிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்...

No comments:

Post a Comment